ஜோதிடம் சொல்வது என்ன? காதலன் காதலியை கொல்லவது ஏன்?

ஜோதிடம் சொல்லும் உண்மைதான் என்ன? காதலன் காதலியை கொல்வானா மாட்டானா? இதை ஜோதிடத்தில் அறிய முடியுமா?

 அவன் பெயர் .....11ம் வகுப்பு படித்து வந்தான். அவள் பெயர் ....  அவளும் 11ம் வகுப்பு படித்து வந்தாள்... இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தார்கள். இவர்கள் நீண்ட நாள் காதலர்களாக இருந்ததால் முதல் கர்ப்பத்தை கலைத்த மாதிரி இரண்டாவது கர்ப்பத்தை  கலைக்கஅவர்களால்  முடியவில்லை... ஏனென்றால் லோகேஸ்வரியின் இரண்டாவது கர்ப்பம் ஐந்து மாதங்களை கடந்து விட்டதால் கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்

இதனால்  காதலன் கார்த்திக் ராஜாவை தன்னை திருமணம் செய்யுமாறு ..... வற்புறுத்தினாள்...

முதலில் தன் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று தட்டி கழித்தான்.  உன் பெற்றோரை கேட்டா என்னை காதலித்து என்னைக் கர்ப்பமாக்கினாய் என்று கேட்டு மீண்டும் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று நச்சரித்தாள்.

காதலி ....யின் நச்சரிப்பினால் ஒத்துக் கொண்டவன் ..நம் காதலை என் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்... அதனால் நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றான்.

உண்மையாக அவனை  காதலித்த அந்த பேதைப் பெண்ணும்..தன் காதலனின் சொல்லை வேத வாக்காக நிணைத்து.. அவனுடன் பைக்கில் சவாரி செய்து ஒரு காட்டிற்குள்  சென்றாள்.

காட்டிற்குள் இருவரும் வந்தபின் அந்த பேதைப் பெண்“ எங்கே விஷம்” என்று கேட்க... அந்தப் பேதைப் பெண்ணின் துப்பட்டாவைக் கொண்டு அவளது கழுத்தை நெறித்துக் கொன்றான்.

தான் நேசித்த பெண்ணுடன் முதலில் ஆசையுடனும், பின்னர் வெறியுடனும் உறவு கொண்டு தனது காமத்தை தீர்த்துக் கொண்ட .........என்பவன். ஈவு இரக்கமில்லாமல் அவளது துப்பட்டாவையே சுருக்கு கயிறாக மாற்றி இறுக்கிக் கொன்றிருக்கிறான்.

புனிதமற்ற முறையில் காதலித்து...அநாகரிமான முறையில்  கொலை செய்த அந்தகாதலன் கைது செய்யப்பட்டபோதுதான்... புனிதமற்ற காதலன் ..தன் புனிதமான காதலியை கொலை செய்த விபரம் வெளியுலகிற்கு தெரிய வந்தன..

ஜோதிட சாஸ்திரப்படி  பெண்ணின் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமும்  களத்திர ஸ்தானமும் சம்பந்தம் அடையுமானால் அந்த பெண்ணிற்கு காதல் ஏற்படுவது இயற்கையே!. அத்தகைய அமைப்பு பெற்ற பெண் காதல் பார்வை பார்க்க ஆரம்பித்துவிடுவாள். இந்த அமைப்பில் புதன்  சம்பந்தப்படுமானால் அந்த  பெண் காதல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுவதோடு அந்த   பெண் காதலிப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்வாள்.. இத்தகைய அமைப்பு ஆணிற்கு அமைந்தால் அவனும் பெண் காதல் கவிதைகள் எழுதி தள்ள ஆரம்பித்துவிடுவதோடு அந்த பெண்ணை காதலிப்பது எப்படி என்பதையும் அறிந்துகொள்வான்!. ஜோதிட சாஸ்திரப்படி அந்த பெண்ணின் ஜாதகத்தில் இந்த அமைப்புடன் சத்ரு ஸ்தானமும் சம்பந்தமும் ஏற்பட்டிருந்தால் காதலரே வில்லனாக அமையும் துர்பாக்கியம் அமையும்! போதாக்குறைக்கு ஆயுள் ஸ்தானமும் அங்கே சம்பந்தம் கொள்ளுமானால் அந்த காதலரால் கடும் அவமானம் சந்திப்பதோடு மரணத்தையும் எதிர்கொள்ள நேரிடும் பரிதாப நிலை உருவாகும்!. விரய ஸ்தானமும் அதனுடன் சம்பந்தம் கொள்ளுமானால் நிறைய பொருள் இழப்புகளும், சோகங்களும் கவலைகளும் மிகுந்து துன்பபட நேரிடும்! அதனால் பெண்கள் காதல் வயப்படும் முன்னால் ஒரு நல்ல ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பித்து கேட்டு அதன்பின்னரே காதல் செய்ய வேண்டும்! சில ஆண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமும் புண்ணிய ஸ்தானமும் சம்பந்தம் பெறுவதோடு அத்துடன் புதன் சுக்ரனும் சம்பந்தம் பெற்று  இருக்கமானால் பெண்களை காதலில் விழ வைப்பது எப்படி? என்ற வித்தை தெரிந்தவராக திகழ்வார்கள்! ஆண்கள் பெண்களை காதலிப்பது குற்றம் என்றோ பெண்கள் ஆண்களை காதலிப்பது குற்றம் என்றோ சொல்லவில்லை.தாராளமாக யாரை வேண்டுமானாலும் காதலிக்கட்டும்! ஆனால் ந்ல்ல குணமுள்ளவராக இருப்பவரை காதலிப்பதுதான் நல்லது! பணம் உள்ளவரா என்று பார்க்காமல் குளமுள்ளவரா என்று பார்ப்பது சாலச்சிறந்தது!

தமிழ் ஓடை ஜோதிடம் உண்மையா? பொய்யா?
மாளவிகா யோகம் என்றால் என்ன?
  காதலன் காதலியை கொல்வான் என்பதை ஜோதிடத்தில் அறிவது எப்படி? ஜோதிடம் மூலம் காதலன் காதலியை கொல்வான் என்பதை அறிவது எப்படி?