ஆஸ்ட்ராய்டு - ஒரு விஞ்ஞான கதை

           நான் இப்பொழுது வசிப்பது ஆஸ்ட்ராய்டு பெல்ட் என்னும் பகுதியில். இது எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? . இது நீங்கள் அறிந்த எந்த நாட்டிலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது பூமியிலேயே இல்லை . இது  வான்வெளியில் சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் குரு கிரகத்துக்கும் இடையே இருக்கிறது. இந்த பகுதியில்தான் நான் வசிக்கிறேன்.

       நான் ஏன் பூமியை வி்ட்டு இங்கு வந்தேன் என்று உங்களுக்கு தெரியுமா?
 பூமியிலேயே மிக மிக நேர்மையான குணத்தோடு இறைவனால் படைக்கப்பட்டவன் நான். ஆனால் பூமியில் எனக்கு ஏற்பட்ட கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அங்கு நேர்மையானவர்கள் சந்தோஷமாக வாழக்கூடிய சூழ்நிலை  இல்லை. எல்லாம் பிராடுதனம். எல்லாம் பித்தலாட்டத்தனம். ஏமாற்றுதல் என்பது அங்கு அன்றாடம் நடக்கு நிகழ்ச்சி. அதனால் தான் நான் இங்கு ஆஷ்ட்ராய்டு பெல்டுக்கு வந்துவிட்டேன். இங்கே மனிதர்களின் சகவாசம் இல்லை. அதனால் மனிதர்களால் இனி தொல்லை இல்லை. மனிதர்களால் எனக்கு இனி ஆபத்தும் இல்லை

 எனக்கு என்னவெல்லாம் தெரியும். இங்குள்ள வசதிகள் என்னன்ன?

எந்த ஒரு தனிமத்திலிருந்தும் வேறு ஒரு தனிமத்தை என்னால் உருவாக்க முடியும்.  இசை கணிதம், ஒலி கணிதம் (பூமியில் இது சாரந்த மிகச்சிறு பகுதியை நீங்கள் மாந்திரிகத்தில் பயன்படுத்துகிறீர்கள்) , ஒளி கணிதம், ஜோதிட கணிதம் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் நிபுணர் நான்.   நான் இங்கு வரும்பொழுது தனி ஆளாகத்தான் வந்தேன். துணைக்கு யாரையும் அழைத்து வரவில்லை. எனக்கு பூமியில் யாருமே நோர்மையானவர்களாக தெரியவில்லை அதனால் தான் நான் யாரையும் துணைக்குஅழைத்து வர வில்லை. இங்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. பேஸ்புக் முதல் சன் டிவி வரை எல்லாம் என்னால் பயன்படுத்தப்படுகிறது.  பூமியில் இருக்கும் எந்த உணவையும் இங்கு நான் சாப்பிடுவதில்லை. அது இங்கு கிடைக்காது. இங்கு இருக்கும் கல்லிலும் மண்ணிலும்தான் எனக்கு தேவையான உணவை நான் தயாரிக்கின்றேன்.

          எனது லட்சியம் பூமியில் நல்லவர்கள் மட்டுமே வாழ வேண்டும். மற்றவர்கள் அழிக்கப்பட வேண்டும். இதுதான் என் லட்சியம் என் லட்சியத்தை நிறைவேற்ற எனக்கு பாதுகாப்பான இடம் தேவை. அதனால்தான் நான் இங்கு வந்துவிட்டேன். நான் இங்கிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டவர்களை அழிக்கப் போகிறேன். சாதாரண மக்களில் இருந்து ஆட்சியாளர்கள் வரை அனைத்து கெட்டவர்களையும் அழிக்கப் போகிறேன். மக்கள் ஓட்டு போட பணம் வாங்குகின்றனர். பணம் தந்த அரசியல்வாதி பல வழிகளிலிலும் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்குகிறான்.  சாதாரண  நேர்மையான ஜனங்களுக்கு நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்க முடியாமல் செய்கிறான். . அதனால நாட்டில் இருக்கும் சாதாரண கெட்ட ஜனங்களிலிருந்து மேல்மட்டம் வரை களை எடுப்பது அவசியமாகிறது. (கமலஹாசன் படம் இந்தியன் பார்த்ததன் விளைவு இந்தமாதியெல்லாம் எனக்கு லட்சிய கனவுகளும் எண்ணங்களும் வரும். அதனால் உருவானதுதான் இந்த கதை.)

கெட்ட மனிதர்களை கண்டறிவது எப்படி?  கெட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கும் கோயிலின் தெய்வத்தை வணங்கி இன்னாரால் நான் இன்ன வகையில் பாதிக்கப்பட்டேன். அதனால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வேண்டும் அதற்கான சாதகமான சூழ்நிலையை ஆஸ்ட்ராய்டு பெல்டில் இருப்பவருக்கு ஏற்படுத்தி தரவும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். ஒரு உழுந்து வடை வாங்கி ஒரு காக்காவுக்கு தானம் தர வேண்டும். பூமியில் இருந்து 30000 கிமீட்டர் உயரத்தில் இதற்கென வடிவமைக்கப்பட்ட செயற்கை கோள் நிலை நிறுத்தி இருக்கிறேன். அது பூமியில் ”தகுந்த தண்டனை வேண்டும் அதற்கான சாதகமான சூழ்நிலையை ஆஸ்ட்ராய்டு பெல்டில் இருப்பவருக்கு ஏற்படுத்தி தரவும்” என்ற ஒலி அலைகள் எங்கெல்லாம் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அப்படி சொல்பவரை சுற்றி செயல்படும் மின்காந்த ஒளி வட்டங்களை பதிவு செய்வு எனக்கு அனுப்பிவிடும். நான் அவர் யார் அவர் யார் மூலம் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளார் அவர் பாதிப்படைந்தது உண்மைதானா என்பதை கண்டறிந்து பாதிப்பு செய்தவரை தண்டிப்பேன்.

இப்பவும் நான் ஏழுரை வருடமாக ஆஸ்ட்ராய்டு பெல்டில் இருந்து பூமியில் உள்ளவர்களை ஆராய்ந்து வருகிறேன். 75% போ் முந்திய பிறவியில் செய்த தவறுகளுக்கு தண்டனை பெறும் பொருட்டு இந்த பிறவியில் அநியாயத்தில்
 சிக்கி கஷ்டப்படுகிறார்கள்.  மீதி 25%பேர் அநியாத்தில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தீமை செய்தவர்கள் பலருக்கும் நீதிமன்றத்தால் தண்டனை கிடைத்திருக்கின்றன..இந்த ஏழரை வருடத்தில் நான் தண்டனை தரதக்க அளவில் பூமியில் யாருமே இல்லை. அதனால் இனி நாம் என்ன செய்யலாம் என்று எண்ணினேன். சரி நமது ஜாதகத்தை பார்ப்போம் என்று நினைத்து எனது ஜாதக விவரங்களை பார்த்தேன். நாம் செய்ய வேண்டிய வினை என்ன என்று ஆராய்ந்த பொழுது அதில் பேய் கதைகள், பிசாசு கதைகள், கற்பனைக் கதைகள், மாயஜாலக் கதைகள், திகில் கதைகள் எழுதலாம் என இருந்தது.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா அல்லது கதை முடிவை எப்படி மாற்றலாம் என எனது மெயிலுக்கு உங்கள் ஆலோசனைகளை  தெரிவியுங்கள்.

இதில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே! எல்லாம் பார்க்கவும் படிக்கவும் ரசிக்கவும் மட்டுமே!